Saturday, February 26, 2011

வணக்கம்.


அன்புடையீர், வணக்கம்.

நமது குறுஞ்செய்திக் கவிஞர்கள் குடுமபத்தின் அனைத்து படைப்பாளிகளையும் இணையதளத்தில் அறிமுகம் செய்யும் நோக்கத்துடன், எனது வலைத்தளங்களில் அவர்களது படைப்புகளைப் பிரசுரித்து வருகிறேன். இதற்கு ஒத்துழைப்பு நல்கிவரும் உங்கள் அனைவருக்கும் எனது நன்றி.

உங்கள் படைப்புகளை அலைபேசியில் எனக்கு அனுப்பும்போது, தெளிவாக டைப் செய்தும், உங்கள் பெயர், ஊர் ஆகியவற்றை தெளிவாகக் குறிப்பிட்டும் அனுப்பவேண்டுகிறேன்.

உங்கள் படைப்புகளை இணையத்தில் வெளியிட்டபின், உங்களுக்கு நான் தகவல் அறிவித்ததும், தவறாமல் இணயதளத்தில் உங்கள் படைப்புகளைக் கண்டு மகிழுங்கள்.

ஓர் அழகான குழந்தையைப் பெற்றெடுக்கும் அன்னையானவள், முதன்முதலாக அதன் முகத்தைக் கண்டு பூரித்து மகிழும் உணர்வை நீங்கள் பெறலாமே!

உங்கள் படைப்புகளை வாசித்து மகிழும் உலகளாவிய வாசகர்களின் பின்னூட்டத்தை அவ்வப்போது நமது வலைத்தளங்களில் பதிவிட்டு, உங்கள் பார்வைக்கு வைக்கும் பணியிலும் உற்சாகமாய் ஒருகிறேன்.

எனது கவிதைத்தளங்களை அலங்கரிக்க படைப்புகளை அளித்துவரும் உங்கள் அனைவருக்கும் எனது மனங்கனிந்த நன்றி, என்றென்றும்!

அன்புடன்,

கிரிஜா மணாளன்

No comments: