
தலைகுனிந்தே.......
==================
நிமிர்ந்து நடக்க ஆசைப்பட்டும்,
முடியவில்லை.......மனிதர்கள்
உமிழ்ந்துவிட்டுப் போகும்
எச்சில்களும்
மிருகங்களின் கழிவுகளினாலும்
தலைகுனிந்தே நடக்கிறேன் நான்...
பாரதியின் சொல்லை
சற்றே மறந்து!
- எஸ். சுமதி, சேலம்
(தமிழ்நாடு)
No comments:
Post a Comment