Sunday, August 15, 2010

நன்றி!

நன்றி!
======

அன்புடையீர், வணக்கம்.

கடந்த 01.08.2010. அன்று தமிழ்நாடு, ஈரோடு மாவட்டம், அந்தியூரில் நிகழ்ந்த "குறுஞ்செய்திக் கவிஞர்களின் குடும்ப நிகழ்ச்சி"யில் பங்கேற்ற கவிஞர்களுக்கும், திரளாகக் கலந்துகொண்ட ஆர்வலர்களுக்கும் எனது அன்புகலந்த நன்றி!

அடுத்து செப்டம்பர் 12 அன்று தமிழ்நாடு திருச்சி மாநகரில் நிகழவிருக்கும் "குறுஞ்செய்திக் கவிஞர்களின் குடும்ப நிகழ்ச்சி" யின் முதலாமாண்டு நிறைவுவிழாவில் கலந்துகொண்டு சிறப்பிக்க அனைவரையும் அன்புடன் அழைக்கிறேன்.

திருச்சி ஈ.வெ.ரா பெரியார்க் கல்லூரி முதுகலை மாணவர் திரு. அருள் முருகன் அவர்கள் ஆய்வு செய்து பாரதிதாசன் பல்கலைக்கழகம் மூலம் தமிழ்நாடு கல்வித்துறையிடம் சமர்ப்பித் துள்ள "குறுஞ்செய்திக் கவிஞர்களைப்பற்றிய ஆய்வு, நூல் வடிவில் இவ்விழாவில் வெளியிடப்பட விருக்கிறது.

விழா பற்றிய நிகழ்ச்சி நிரல் விரைவில் இவ்வலைத்தளத்தில் உங்கள் பார்வைக்கு வரும்.

- கிரிஜாமணாளன்
Editor,
www.smapoets-tamil.blogspot.com
www.smskavignarkal-world.blogspot.com

Monday, August 2, 2010

குறுஞ்செய்திக் கவிஞர்கள் குடும்பத்தின் 3 வது சந்திப்பு விழா

குறுஞ்செய்திக் கவிஞர்கள் குடும்பத்தின் 3 வது சந்திப்பு விழா
நாள் : 01.08.2010 ஞாயிறு

இடம்: அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, அந்தியூர்,
ஈரோடு மாவட்டம், தமிழ்நாடு.

நேரம்: காலை 09.30 முதல் மாலை 6 மணி வரை.

நிகழ்ச்சிகள்:

காலை 9.30 வரவேற்பு
காலை 9.45 கவிஞர்கள் அறிமுகமும், கவிச்சரமும்.
காலை 11 மணி கவிஞர் பா. ஜெயக்குமார் அவர்களின் "செவ்வானமும், சிறு தூரலும்" கவிதைநூல் வெளியீடு
மதியம் 1.00 விருந்து
மதியம் 2 முதல் மாலை 6 வரை "கலந்துரையாடல்" - பல்சுவை நிகழ்ச்சிகள்.

அனைவரும் வருக!

அன்புடன்,

குறுஞ்செய்திக் கவிஞர்கள் குடும்ப உறுப்பினர்கள்.



"குறுஞ்செய்திக் கவிஞர்களின் குடும்ப நிகழ்ச்சி"

அன்பு நண்பர்களுக்கு,
ஜூன் 20 அன்று செஞ்சி நகரில் நிகழவிருந்த "குறுஞ்செய்திக் கவிஞர்களின் குடும்ப நிகழ்ச்சி" எதிர்பாராத சில காரணங்களால் நிறுத்தப்பட்டு,, அச்சந்திப்பு வரும் ஆகஸ்ட் 1, 2010 அன்று தமிழ்நாடு, ஈரோடு மாவட்டம் அந்தியூரில் நடத்தப்பட்விருக்கிறது என்பதை அறிவித்துக்கொள்கிறோம்.

- கிரிஜா மணாளன்
எடிட்டர்.