Tuesday, August 25, 2015

மகத்தான  தெய்வம்  நீ!













வந்தாரை வாழவைக்கும்

இந்தியாவிற்கு  வந்து

வாழவைத்தாய் இங்கே

வறியோரையும் எளியோரையும்!

தொழுநோயாளிகளின்

துயர்களைந்து வாழவைத்தாய்!

அவர்கள்

தொழுகின்ற  தெய்வமாய்

நிலைத்து  நின்றாய்!

விண்ணுக்குச்  சென்றாலும்  இந்திய

மண்ணுக்குச்  சொந்தமான

மகத்தான  தெய்வம்  நீ!


- கவிஞர்  வீ .உதயகுமாரன்

வீரன்வயல்,   தமிழ்நாடு.
அன்னை  தெரசா
==============-=================
(August 26, 1910  --  Septenber 5,1997) 










எளிமை  அன்போடு அறிவாற்றல் என
எல்லாமே பெற்ற அன்னை !
இனிமையாய்ப் பழகும் நேர்த்தியால்
இன்றும்
உலகே நினைக்கிறது உன்னை!


- கிரிஜாமணாளன், திருச்சி, தமிழ்நாடு
========================================

தன்னைப் பெற்றெடுக்காதப்பல
பெற்றோர்களுக்குப்
பிள்ளையானவர்!
தான் பெற்றெடுக்காதப் பல
பிள்ளைகளுக்குத்
தாயானவர்!
எந்த  மருத்துவனும்  கண்டு
முகம்  சுளிக்கும்
நோயாளிகளை
முத்தமிட்டு மருத்துவம் செய்த
முதல்  மருத்துவர்!

- மூர்த்திதாசன், தேனி, தமிழ்நாடு.
=========================

கோலூன்றும்  வயதிலும்  அன்னை
கொள்கை  தவறவில்லை! - இலட்சியக்
காலூன்றி  நடந்த அவரும்
கருத்தினில்  மாறவில்லை!
ஆலூன்றி  வளர்தல்போல்
அனைவரின்  நெஞ்சில்  நின்று
நூல்போற்றும்  மனிதநேயம்
நுகர்ந்தவராம் நமது  அன்னை!

- கிரிஜாமணாளன், திருச்சி,  தமிழ்நாடு
============================

இந்தியம்  செய்த  புண்ணியம்  அவரை
இங்கே  அழைத்து  வந்தது!
அயலகத்தில்  அவதரித்தாலும்,
உந்திடும்  மனிதநேயம்
உள்ளத்தில்  பெற்றவராய் - மக்கள்
சிந்திடும்  கண்ணீரைத்  துடைக்க
சீர்மிகு  சேவையாற்றி
இந்திய  மக்களின்
இதயத்  துடிப்பாய்  அவர்!

- எஸ்.வளர்மதி, ஈரோடு, தமிழ்நாடு
================================

 







கர்ணனைக்  கண்டதில்லை
நம்பியதுண்டுஅவரின்
வள்ளல்  தன்மையை
எண்ணியதுண்டு
கொடையில்  அவரை  மிஞ்ச
எவருமில்லை  என்று!
அந்தக்  கர்ணனே
கையேந்துவான்
அன்பையும்  சேர்த்துக்
கொடையளித்த
அன்னை  உங்களிடம்!
மண்ணில்
மனிதநேயம்  வளர்க்க,
அன்னையே, உங்கள்  பிறந்தநாளில்
விண்ணை  நோக்கி  உங்களை  வணங்கி
விரதம்  பூண்டு
உறுதிகொள்கிறோம்  நாங்கள்!

- கங்கை  கணேசன், மதுரை
==============================

அன்பும்அரவணைப்பும்
அளவற்ற  சகிப்புத்தன்மையும்
தன்னுள்ளே கொண்டு
தடம்பதித்தாய்  வரலாற்றில்!

கல்விநிதிக்காக
கையேந்தி  நின்றபோது,
காரி  உமிழ்ந்தவனையும்
கருணையுடன்  மன்னித்த
காரிகைநீ!
உன்னுள்  மலர்ந்த  மனிதநேயம்
உலகமெங்கும்  பரவட்டும்!

- பத்மாவதி  கிருஷ்ணசாமி,  நன்னிலம்
தமிழ்நாடு.
============================

மண்ணில்வந்தவெண்ணிலாநீ!
எண்ணிடப்பெருமைதரும்
அன்னையாய்ச்சேவைபுரியும்
பெண்ணிலாநீ!

@            @            @

கோடியில்ஒருத்திநீ!
கோபுரக்கலசம்நீ!

@            @            @

அன்புச்சிறைக்கைதி!
பண்புநிறைதாதி!
உன்னில்இரக்கம்பாதி!
தன்னில்ஈவுமீதி!

@            @            @

நோபல்பரிசுபெற்ற
நோபிள்லேடி
கருணையின்ஐடி (    )

@            @            @

மானுடச்சேவையே
தான்கொண்டநோன்பாய்
ஊனுடல்வருத்தி
உன்னதச்சேவைபுரிந்த
அன்னையேதெரசா!


- கவிதாயினி   வஞ்சி, நெல்லை
தமிழ்நாடு

=========================
நான்புனிதமானேன்!
================
கருவாயில்  உயிர்த்துளிகளைச்
சுமக்காமல்
சுமந்தாய்  பல பிள்ளைகளை,
உன் இதயக்  கருவறையில்!
கம்பன் பாவம் செய்தவன் ஆனான்,
கனிவின் சிகரம் உன்னைப்பற்றி
எழுதாமல் போனதால்!
நான் புனிதம் ஆனேன் - இங்கே,
உன்னைப்  பற்றி  எழுதியதால்!

- பாரதி  பாக்கியம், தேனி
தமிழ்நாடு.
=============================
எந்தன் எழுதுகோல்
அகம் மகிழ்ந்தது
அன்னை  உன்னைப் பற்றி
எழுதுவதால்!
அன்னிய தேசத்தில் மலர்ந்தாய்
மல்லிகையாக!
மணம்பரப்பி வலம் வந்தாய்
அகிலமெங்கும்!
செந்தாழம்பூவே1
செல்வச் செழிப்பில் வளர்ந்தாலும்
சேரவில்லை  உன்னிடத்தில்
செருக்கு!
புல்லுருவிகள்  செய்த  தவறினால்
உண்டான காயங்களுக்காக
மருந்தானாய்!
எச்சில்  துளிகளையும்
எந்திச்  சிரித்தாய்! - உன்
செங்காந்தள் விரல்களில்!
ஐம்பூதங்களும் நீதான் என்பேன் நான்!
நிலமாய் இருந்து
பாதங்கள் பல தாங்கினாய்!
நிராய் இருந்து
தாகங்கள்மாற்றினாய்!
ஒளியாய்இருந்து
இருள் அகற்றினாய்!
காற்றாய்  வந்து
புல்லாங்குழல்  தந்தாய்!
ஆகாயமாய் வந்து
அகிலம்  முழுவதிற்கும்
அன்னையானாய்!
- பாரதி  பாக்கியம், தேனி
தமிழ்நாடு.
 ==============================
 






கருணையில்  கங்கை  நீ!
====================

பதின்மப்  பருவத்திலே
இளமை  உருவத்திலே
இரக்க  உள்ளத்திலே
இனிய  குணத்திலே
நிறைபெண்ணாய்
துறவு பூண்டாய்!

உள்ளமும் வெள்ளை,
உடையும் வெள்ளை!
மனித மனங்களைக்
கொள்ளை கொண்ட
பிள்ளை!

தொழுநோயாளி  தழுவி
விழிநீர்த்  துடைத்த
தயைப் பூங்கா நீ!
கருணைக் கங்கா நீ!

- கவிதாயினி  வஞ்சி, நெல்லை
தமிழ்நாடு
=============================
அன்பின்  பெருங்கடல்!
===================
ஏழையின்  வீட்டில்
இருளை  விலக்கி
வெளிச்ச  விளக்கை
ஏற்றவந்த அருளொளி!

காவியத்தின்  சரித்திரம்!
நிதானத்தின்  நிலைக்கோல்!
அன்பின் பெருங்கடல்!
தானத்தில் பெருவள்ளல்!
இரக்கத்தின்  இருப்பிடமே
அன்னை தெரசா!

- வைரநகர்  சிவாஜி,
புஷ்பவனம்,  தமிழ்நாடு
============================











Sunday, August 23, 2015



(குறுஞ்செய்திக் கவிஞர்களும், பிற தோழர்களும் அனுப்பிவரும் கவிதைகள் இத்தளத்தில் தொடரும்.).










மனிதநேயம்!

இதயத்திலிருந்து  இறக்கிவிடாதீர்கள்
மனிதநேயத்தை!
உதயமாகட்டும் மனிதநேயம்
உலகமெங்கும்!
சகல தேசங்களும்
சகல சமூகங்களும்
சமத்துவம் காண
தழைக்கட்டும்
மனிதநேயம்!

====================================
====================================

பேரழிவு மூட்டும் பெரும்போர்களையும்
சீரழிவு விளைக்கும் சமூக அவலங்களையும்
பாரிலிருந்து விரட்டப் பயன்படுவது
வேறொன்றுமில்லை,
மனிதநேயமே!

- கிரிஜா மணாளன், திருச்சி, தமிழ்நாடு
 ==============================
==============================

உண்ணுதற்கு மட்டுமல்ல
உதவுவதற்கும்தான் கரங்கள்!
தன்னலம் கருதாமல்
தவிப்போர்க்கு உதவிசெய்ய
எண்ணினாலே மலரும்
எல்லோர் மனதிலும் மனிதநேயம்!

- எஸ்.வளர்மதி, ஈரோடு
==============================
==============================


மனிதநேய மகத்துவத்தை
மக்கள் நாம் மறந்தால்,
புனிதர் காந்தி கொள்கையைப்
புறக்கணித்தவர் ஆவோம்!

இனியொரு விதி செய்வோம்
இந்நாட்டின் ஒற்றுமைக்கு
தனிமனிதன்  ஒவ்வொருவரும்
தழைக்க வைப்போம் மனிதநேயத்தை!

- மங்களம் மைந்தன், திருச்சி
தமிழ்நாடு
 =====================================
======================================
கடும்நோயின்
வேதனை  முழுதும் மறைந்தது
மருத்துவரின் மனிதநேயமிக்க
வாய் வார்த்தையில்.

- கங்கை கணேசன், மதுரை
===============================
===============================

மனிதநேயம் உயிரோடிருக்கிறது,
மது அருந்தும் மேஜையின்முன்!
மனிதநேயம்  செத்துவிட்டது,
மனைக்கு வந்த மனைவியின்முன்!

- கவிஞர். டாக்டர், பி.எஸ்.சன்னாசி
தேனி, தமிழ்நாடு

===============================
=====================================
"மனிதநேயம்"

நாடுகளையும் மொழிகளையும்
தாண்டிய நட்பு,
மதங்களையும் இனங்களையும்
தாண்டிய மனம்,
அதுவே...
மனிதகுலம் தழைப்பதற்கான
மனிதநேயம்!
==========================
==========================
சாதிக் கலவரத்தில்
மனிதர்கள் சாகும்முன்னே
அவர்களுக்குள் செத்துப்போனது
'மனிதநேயம்'.
==========================
==========================
சிறுகச் சிறுக அரித்துப்போகிறது
சுயநல செல்கள்
மனிதனுள் வளர்ந்த
மனிதநேயம்
முழுவதும் அரித்துவிட்டால்
நாளை மிஞ்சுவது
வெற்றுடல் மட்டுமே!

==========================
==========================
 சாலையில் எதிரே ஒருவன்
இரத்தவெள்ளத்தில் துடிக்கும்போது
கண்களை மூடிக்கொண்டு
சுயநலமாய்ப் பயணம் தொடரும்
மனிதர்களிடையே மரித்துப்போனது
'மனிதநேயம்'!.
==========================
==========================
போதை வஸ்துவை
உடலில் புகுத்தி
பெண்களின் கற்பை
கரன்ஸியில் பறிக்கும்
கயவர்களிடம்
கசங்கியே காயப்பட்டுக்
காணாமற்போனது
"மனிதநேயம்'!
=========================
=========================
 தன் இனத்தைத்
தானே அழிக்கும் அவலம்,
நேயம் மறந்த நரகர்களால்,
வெடித்த தீவிரவாதத்தால்
சிதறியேபோனது "மனிதநேயம்"!
தின்று துப்பிய கரும்புகூட
எறும்புக்குச் சிறு பசியாற்றும்
மாளிகையில் வாழ்ந்தாலும்
மனிதநேயம் மறந்த மனிதர்களால்
வேதனைப்படும் சிறு எறும்பும்.

==========================
==========================

மனிதம்!

கசங்கிப்போகும் வார்த்தைக் காயங்களால்
களிப்பற்ற மனம் சில சமயம்!
சுயநல சுனாமியில் சிக்கிச்
சிதறும் மனம் சில சமயம்
விலங்காய் மாறி வெறிக்கோலமிட்டு
வேட்டையாடும் மனம் சில சமயம்
புலப்படாத பொழுதுகளில்
பொங்கிவரும் கண்ணீரில்
புலம்பும் மனம் சில சமயம்
விழி விளக்கில்லாதொரு இருளில் 
சிக்கித்தவிக்கும் மனம் சில சமயம்
இன்னும் இன்னும்
இப்படியான பல சமயங்களைத்
தாண்டித்தான்
எப்போதாவது பூக்கிறது
நம்மில் மனிதம்!

கவிதாயினி  கொட்டக்குளம்  ரம்யா
தமிழ்நாடு.

==============================

========================= =====

மனிதநேயம் கொள்வோம் !
----------------------------------------
போற்றுதலுக்குரிய  தன்னம்பிக்கை,
புரிதலோடு கூடிய வாழ்க்கை,
தேற்றிக்கொள்ளும்  மனத்தெளிவு,
தீர்க்கமான  குறிக்கோள்கள்,
ஆற்றிவரும்  அரிய சாதனைகள்,
அத்தனையும்  தம்முள்கொண்ட.....
மாற்றுத்திறனாளிகளால்தான் இந்த
மனிதகுலமே வாழ்கிறது!
மனிதநேயம்  கொள்வோம்
மாற்றுத்திறனாளி  தோழர்கள்மீது!

-         கிரிஜா மணாளன், திருச்சி. (தமிழ்நாடு)
 ===============================

மனிதநேயம்!

விடியும்போதெல்லாம்
முடியாவிட்டாலும்,
முடியும்போதெல்லாம்
விடியட்டும்
நமக்குள்  இருக்கும்
மனிதநேயம்!

(ரா. பார்த்திபன், திரைப்பட நடிகர்/இயக்குநர்)


- கங்கை  கணேசன், மதுரை
==================================
==================================

மனிதநேயம்  வளர்ப்போம்!

மதக்கலவரத்தை  மற்றவனா
கொண்டுவந்தான்?
இந்த மண்ணின்  மைந்தர் தானே!

வரதட்சணைக்   கொடுமையை
வந்தவனா  கொண்டுவந்தான்?
இங்கு  வளர்ந்தவன்தானே!

அரசியல்  ஊழல்களை
அந்நியனா   கற்றுத்தந்தான்?
உள்ளூர்க்காரன் தானே!

அராஜகத்தைக் கொண்டுவந்தது
அந்நியனா?
அயலான் தானே!

கள்ளச்சாராயத்தைக் 
கடல் கடந்தா  கொண்டுவந்தான்?
கயவர்கள் கூட்டம்
உள்ளூரில்தானே?

கொலையும்  களவும் கூடுதலாகி,
கொள்ளையர்  கூட்டமும் மிகுதியாகி
குற்றங்கள்  விளைவதெல்லாம்
நம் நாட்டில்தானே?

இளைஞனே!
மீண்டும்  முயற்சி செய்,
மனிதநேயத்தைத்  தேட!

மூளையிருந்தும்  ஏன்
மூலையில்
முடங்கிக்  கிடக்கிறாய்?
விண்ணைத் தொடும் கரங்களைக்
கன்னத்தில்  வைத்துக்கொண்டு
காலத்தை  ஏன்  கரைக்கிறாய்?

அலைகடல்  தந்த  முத்து,
அன்னை  பாரத்ததின்  சொத்து,
மனிதநேயத்தின்  வித்து,
மாமனிதர்   கலாமைப்  பின்பற்றி
களைகளை  நீக்கிக்
காப்போம்  மனிதநேயத்தை!
வளரட்டும்  மனிதநேயம்  எங்கும்
வளமாக!

- கவிதாயினி. யோகேசுவரிஉதகை, தமிழ்நாடு
=============================================
=============================================

                குற்றவாளியையும்  மனித நேயத் துடன்  நடத்துவது  தவறில்லை
ஆனால்மனிதநேயத்தை   மதிக்காமல்கொலை, கொள்ளை, கற்பழிப்பு  
எனக் குற்றம்  செய்தவன்  மனித  இனத்திலேயே  சேர்த்தியில்லாதவன்.
                அவனுக்கு, மனித நேயம் மட்டுமல்லமனிதவுரிமைச்  
சட்டமும்  மறுக்கப்பட்டுகடும்  தண்டனை  அளிக்க வேண்டும்!

- கங்கை  கணேசன், மதுரை.

===============================