டாக்டர் அப்துல் கலாமின் சிந்தனைகள்.
========= கவிதைகள் =========
தாய்மண்ணின் பெருமையினைத்
தரணியெங்கும் தழைக்கச் செய்த
தயாளன் அப்துல்கலாமைத்
தாளாத நன்றியோடு
தாய்மண்ணே
தழுவி அரவணைத்த நாள்…..
30.07.2015 !
- கிரிஜாமணாளன், திருச்சி.
=========================
மேதை ஆ'கலாம்' என
பாதை காட்டிய 'கலாம்' அய்யா
எங்களை விட்டு
எப்படிப் பிரிந்து போ'கலாம்'?
இந்தியா வல்லரசு ஆ'கலாம்',
எனும், உங்கள் கனவு
நாளை பலிக் 'கலாம்'!
- கவிஞர் வீ. உதயகுமாரன், வீரன்வயல்.
===================================================
மண்ணில் மறைந்து
விண்ணிற்குச் சென்றாலும்கூட
நிரந்தரமாய் நம் இதயங்களில்
என்றும் வாழ்வார்
மனிததெய்வம், மாமேதை
அப்துல்கலாம்!
- முத்துஆனந்த், வேலூர்
====================================================
கனவு காணும்படி சொன்னீர்கள்
கடைசியில் உங்களைக்
கனவில் மட்டுமே நாங்கள்
காணும்படி செய்துவிட்டீர்களே!
மனிதக்கடவுளே! உங்கள்
மலர்ந்தமுகம் மறையாது எங்கள்
மனதைவிட்டு!
- முத்துஆனந்த், வேலூர்
========================================================
இந்தியாவின் ஆன்மா நீ!
இளைஞர்களின் கனவு நீ!
ஓயாது உனது காலடித்தடங்கள்!
உறங்காது உன் கனவுகள்!
@ @ @
எளிமையான அணுகுமுறை
வலிமையான தன்னம்பிக்கை
முழுமையான அறிவாற்றல்,
திறமையான தீர்க்கதரிசி….
டாக்டர் அப்துல்கலாம்!
-
எஸ்.வளர்மதி, ஈரோடு
=======================================================
அக்னிச் சிறகுகளை
உதிர்த்துவிட்டு
கண்களை மூடியதோ
கனவுப் பறவை?
************************
மரணம்கூட
மகுடம் சூட்டியது
மாணவர்கள் மத்தியில்
மகத்தான ஆசான்
அப்துல்கலாமுக்கு!
-
கவிதாயினி மும்தாஜ்பேகம், திருச்சி.
=======================================================
அல்லாவின் சக்தியை நம்பியவர்!
அணுசக்தியை விரும்பியவர்!
ராமேஸ்வரத்தில் உதித்த பிரம்மச்சாரி!
ராக்கெட் விஞ்ஞானத்தில் சூத்திரதாரி!
மாணவர்களின் அன்புநண்பன்!
மாண்புமிகு முதற்குடிமகன்!
கனவுகாணச் சொன்னவர்! - இப்போது
கனவாகிச் சென்றவர்!
காலமெல்லாம் நிலைத்திருக்கும்
கலாம் அவரின் புகழ்!
-
கவிதாயினி 'வஞ்சி', நெல்லை.
========================================================
குடிசை வீட்டில் பிறந்தாய்,
குடியரசுதலைவராய் மலர்ந்தாய்!
பன்முகங்களைக் கொண்டு
பாரதமக்களின் மனங்களில் நின்றாய்!
கனவுகாணுங்கள் என்று சொன்னாய்,
இன்று
கானல்நீராக மறைந்தது ஏனோ?
-
வி.சென்னப்பன், கீரைப்பட்டி (தர்மபுரி)
-=====================================================
ஏவுகணை விட்டு
எவெரெஸ்ட்டைத் தொட்டவனே!
இளைஞர் உள்ளமெல்லாம்
எழுச்சி தீபமேற்றி,
பாரதத்தை, உலகமே
பார்க்கச் செய்தவனே!
வல்லரசாகும் இந்தியா,
வரும் 2020ல்! என்று,
சபதம் ஏற்கின்றோம் - எங்கள்
சாதனை நாயகரே!
-
மு.குமரன், பண்ணாந்தூர்
========================================================-
மண்ணுலகில் பிறந்து,
மகத்தான சாதனைகள் புரிந்து,
விண்ணுலகம் சென்ற நீ - எங்கள்
விழிகள்முன் வழிகாட்டியாய் என்றும்!
-
வி.சென்னப்பன், கீரைப்பட்டி, தர்மபுரி
========================================================
விதைத்துச் சென்றுள்ளார் கலாம்,
இளைஞர்கள் என்னும் விதை!
முளைத்து நாளை விருட்சமாகும் - உலகம்
முன்நின்று போற்றும் அதை!
-
வைரநகர் சிவாஜி, மதுரை.
========================================================
ஒரேவானம், ஒரேபூமி,
வாழ்ந்தாலும், மறைந்தாலும்
பாரதத்தின்
ஒப்பற்ற ஒரே தலைவர்
உத்தமர் அப்துல்கலாம்!
அவருக்கே என்றென்றும்
நமது சலாம்!
- ஏ.எம்.முபாரக், கல்லுப்பட்டி (தேனி)
=======================================================
விண்ணைப்பற்றிப் படித்தவர் - தாய்
மண்ணைப்பற்றிப் படிக்கச் சென்றாரோ?
கலாமுக்குச் சலாம் போடலாமே!
அவர் சாதனைகளைச் சரித்திரம் சொல்லும்!
கனவைக் காணச் சொன்னவர்,
காவியம் பாடவைத்துவிட்டாரே!
விண்ணைத் தொடச் சென்றவரே!
விண்மீனாய்க் காட்சி தருவீரோ?
காற்றோடு கலந்து எமக்குக்
கண்ணீர் வடியவைத்தாரோ!=====================
- ஜமீலா பேகம், உதகை======
=======================================================
இறங்கிவிட்டார்
மேகாலயாவின்
மேகக் கூட்டங்களில்!
மின்னலாய் மறைந்த
அப்துல் கலாம்!
இந்திய மக்களின்
ஈரவிழிகளில்
என்றும் உலராது
சோகக் கண்ணீர்!
-
கவிஞர் புதுயுகம்
புதைக்கப்படவில்லை நீ,
விதைக்கப்பட்டாய்!
உன்
கனவுகள் முளைத்து/
விருட்சமாகும்/
காலம் வரும்!
'கலாம் விருட்சம்'/
காலமெல்லாம்/
நிலைத்து நிற்கும்!
-
கிரிஜாமணாளன்
=========================
பிழைப்பதற்கே அரசியலைப்
பேணித் தழுவி நிற்கும்,
பெரியமனிதர்களை விட்டுவிட்டு,
நாடு
தழைப்பதற்குத் தன் பணியை
தளராமல் ஆற்றிய
தயாளரை
அழைத்துக்கொள்ள உனக்கு
அவசரமென்ன ஆண்டவா?
- கிரிஜாமணாளன், திருச்சி
No comments:
Post a Comment