Monday, August 3, 2015



டாக்டர் அப்துல் கலாமின் சிந்தனைகள். ========= கவிதைகள் ========= தாய்மண்ணின் பெருமையினைத் தரணியெங்கும் தழைக்கச் செய்த தயாளன் அப்துல்கலாமைத் தாளாத நன்றியோடு தாய்மண்ணே தழுவி அரவணைத்த நாள்….. 30.07.2015 ! - கிரிஜாமணாளன், திருச்சி. ========================= மேதை ஆ'கலாம்' என பாதை காட்டிய 'கலாம்' அய்யா எங்களை விட்டு எப்படிப் பிரிந்து போ'கலாம்'? இந்தியா வல்லரசு ஆ'கலாம்', எனும், உங்கள் கனவு நாளை பலிக் 'கலாம்'! - கவிஞர் வீ. உதயகுமாரன், வீரன்வயல். =================================================== மண்ணில் மறைந்து விண்ணிற்குச் சென்றாலும்கூட நிரந்தரமாய் நம் இதயங்களில் என்றும் வாழ்வார் மனிததெய்வம், மாமேதை அப்துல்கலாம்! - முத்துஆனந்த், வேலூர் ==================================================== கனவு காணும்படி சொன்னீர்கள் கடைசியில் உங்களைக் கனவில் மட்டுமே நாங்கள் காணும்படி செய்துவிட்டீர்களே! மனிதக்கடவுளே! உங்கள் மலர்ந்தமுகம் மறையாது எங்கள் மனதைவிட்டு! - முத்துஆனந்த், வேலூர் ======================================================== இந்தியாவின் ஆன்மா நீ! இளைஞர்களின் கனவு நீ! ஓயாது உனது காலடித்தடங்கள்! உறங்காது உன் கனவுகள்! @ @ @ எளிமையான அணுகுமுறை வலிமையான தன்னம்பிக்கை முழுமையான அறிவாற்றல், திறமையான தீர்க்கதரிசி…. டாக்டர் அப்துல்கலாம்! - எஸ்.வளர்மதி, ஈரோடு ======================================================= அக்னிச் சிறகுகளை உதிர்த்துவிட்டு கண்களை மூடியதோ கனவுப் பறவை? ************************ மரணம்கூட மகுடம் சூட்டியது மாணவர்கள் மத்தியில் மகத்தான ஆசான் அப்துல்கலாமுக்கு! - கவிதாயினி மும்தாஜ்பேகம், திருச்சி. ======================================================= அல்லாவின் சக்தியை நம்பியவர்! அணுசக்தியை விரும்பியவர்! ராமேஸ்வரத்தில் உதித்த பிரம்மச்சாரி! ராக்கெட் விஞ்ஞானத்தில் சூத்திரதாரி! மாணவர்களின் அன்புநண்பன்! மாண்புமிகு முதற்குடிமகன்! கனவுகாணச் சொன்னவர்! - இப்போது கனவாகிச் சென்றவர்! காலமெல்லாம் நிலைத்திருக்கும் கலாம் அவரின் புகழ்! -கவிதாயினி 'வஞ்சி', நெல்லை. ======================================================== குடிசை வீட்டில் பிறந்தாய், குடியரசுதலைவராய் மலர்ந்தாய்! பன்முகங்களைக் கொண்டு பாரதமக்களின் மனங்களில் நின்றாய்! கனவுகாணுங்கள் என்று சொன்னாய், இன்று கானல்நீராக மறைந்தது ஏனோ? - வி.சென்னப்பன், கீரைப்பட்டி (தர்மபுரி) -===================================================== ஏவுகணை விட்டு எவெரெஸ்ட்டைத் தொட்டவனே! இளைஞர் உள்ளமெல்லாம் எழுச்சி தீபமேற்றி, பாரதத்தை, உலகமே பார்க்கச் செய்தவனே! வல்லரசாகும் இந்தியா, வரும் 2020ல்! என்று, சபதம் ஏற்கின்றோம் - எங்கள் சாதனை நாயகரே! - மு.குமரன், பண்ணாந்தூர் ========================================================- மண்ணுலகில் பிறந்து, மகத்தான சாதனைகள் புரிந்து, விண்ணுலகம் சென்ற நீ - எங்கள் விழிகள்முன் வழிகாட்டியாய் என்றும்! - வி.சென்னப்பன், கீரைப்பட்டி, தர்மபுரி ======================================================== விதைத்துச் சென்றுள்ளார் கலாம், இளைஞர்கள் என்னும் விதை! முளைத்து நாளை விருட்சமாகும் - உலகம் முன்நின்று போற்றும் அதை! - வைரநகர் சிவாஜி, மதுரை. ======================================================== ஒரேவானம், ஒரேபூமி, வாழ்ந்தாலும், மறைந்தாலும் பாரதத்தின் ஒப்பற்ற ஒரே தலைவர் உத்தமர் அப்துல்கலாம்! அவருக்கே என்றென்றும் நமது சலாம்! - ஏ.எம்.முபாரக், கல்லுப்பட்டி (தேனி) ======================================================= விண்ணைப்பற்றிப் படித்தவர் - தாய் மண்ணைப்பற்றிப் படிக்கச் சென்றாரோ? கலாமுக்குச் சலாம் போடலாமே! அவர் சாதனைகளைச் சரித்திரம் சொல்லும்! கனவைக் காணச் சொன்னவர், காவியம் பாடவைத்துவிட்டாரே! விண்ணைத் தொடச் சென்றவரே! விண்மீனாய்க் காட்சி தருவீரோ? காற்றோடு கலந்து எமக்குக் கண்ணீர் வடியவைத்தாரோ!===================== - ஜமீலா பேகம், உதகை====== =======================================================
இறங்கிவிட்டார் மேகாலயாவின் மேகக் கூட்டங்களில்! மின்னலாய் மறைந்த அப்துல் கலாம்! இந்திய மக்களின் ஈரவிழிகளில் என்றும் உலராது சோகக் கண்ணீர்! - கவிஞர் புதுயுகம்
புதைக்கப்படவில்லை நீ, விதைக்கப்பட்டாய்! உன் கனவுகள் முளைத்து/ விருட்சமாகும்/ காலம் வரும்! 'கலாம் விருட்சம்'/ காலமெல்லாம்/ நிலைத்து நிற்கும்! - கிரிஜாமணாளன் ========================= பிழைப்பதற்கே அரசியலைப் பேணித் தழுவி நிற்கும், பெரியமனிதர்களை விட்டுவிட்டு, நாடு தழைப்பதற்குத் தன் பணியை தளராமல் ஆற்றிய தயாளரை அழைத்துக்கொள்ள உனக்கு அவசரமென்ன ஆண்டவா? - கிரிஜாமணாளன், திருச்சி

No comments: