Sunday, August 15, 2010

நன்றி!

நன்றி!
======

அன்புடையீர், வணக்கம்.

கடந்த 01.08.2010. அன்று தமிழ்நாடு, ஈரோடு மாவட்டம், அந்தியூரில் நிகழ்ந்த "குறுஞ்செய்திக் கவிஞர்களின் குடும்ப நிகழ்ச்சி"யில் பங்கேற்ற கவிஞர்களுக்கும், திரளாகக் கலந்துகொண்ட ஆர்வலர்களுக்கும் எனது அன்புகலந்த நன்றி!

அடுத்து செப்டம்பர் 12 அன்று தமிழ்நாடு திருச்சி மாநகரில் நிகழவிருக்கும் "குறுஞ்செய்திக் கவிஞர்களின் குடும்ப நிகழ்ச்சி" யின் முதலாமாண்டு நிறைவுவிழாவில் கலந்துகொண்டு சிறப்பிக்க அனைவரையும் அன்புடன் அழைக்கிறேன்.

திருச்சி ஈ.வெ.ரா பெரியார்க் கல்லூரி முதுகலை மாணவர் திரு. அருள் முருகன் அவர்கள் ஆய்வு செய்து பாரதிதாசன் பல்கலைக்கழகம் மூலம் தமிழ்நாடு கல்வித்துறையிடம் சமர்ப்பித் துள்ள "குறுஞ்செய்திக் கவிஞர்களைப்பற்றிய ஆய்வு, நூல் வடிவில் இவ்விழாவில் வெளியிடப்பட விருக்கிறது.

விழா பற்றிய நிகழ்ச்சி நிரல் விரைவில் இவ்வலைத்தளத்தில் உங்கள் பார்வைக்கு வரும்.

- கிரிஜாமணாளன்
Editor,
www.smapoets-tamil.blogspot.com
www.smskavignarkal-world.blogspot.com

No comments: