Wednesday, November 10, 2010

காந்தியம்



>காந்தியம்


பண்டிகைக் காலங்களில் மட்டுமே
நீயும் கதரும்
நினைவுக்கு வருகிறீர்கள்..
நீ மேல்சட்டையை
ஏழைகளின் நிலைகண்டு வருந்தி
துறந்தாய்,
இன்று...மேலாடைகள்,
விளம்பரத்துக்காகவும்
கவர்ச்சி அணிவகுப்புக்காகவுமே
களையப்படுகின்றன!
கொலையும், கொள்ளையும்
தலைவிரித்தாடுகின்றன!
'காந்தியம்' பேசிய உதடுகள்
இன்று
'கோட்சேயிஸம்" பேசுகின்றன!



கவிதாயினி சுமதி
சேலம், (தமிழ்நாடு)

No comments: