Friday, February 12, 2016





காதலர் தினம் - 2016  
கவிதைகள்

தனித்து  வாழ்ந்தது  சோதனை
(கா)தலித்து  வாழ்வதே  சாதனை!
---------------------------------------------------
ஒருதலையாய்க்  காதலித்து
இன்று
இருதலைக்கொள்ளி  எறும்பாக  ஆனாலும்,
என்றும்  கடிக்காத  காதலராய்
கல்யாணத்துக்குப்  பின்னும்
வாழ்கிறோமே........
காதலிக்கு  ஜே!

---------------------------------------------------------
அன்று
பதினாறும் பெற்று
பெருவாழ்வு வாழ்க என்றனர்
பெரியோர்,
இன்று,
பதினாலும்  பெற்று
காதலோடு வாழ் என்கிறான்
சிறியோன்!
-----------------------------------------------------

கரையோரப்   படகு
காதலர்களுக்குப்   பாதுகாப்பாகுமா?
கயவர்களின்  பார்வையில்
காதலைத் தொலைக்காதீர்கள்!

- ராம்கோபால், மதுரை, தமிழ்நாடு
============================
============================

உன்விழிப் பார்வையில் எரியும்என்னை
அணைப்பாயோ
அள்ளிப் பூசிக்கொள்வாயோ
காதலோடு!
-----------------------------------------------------------
எனக்காக  வாழ்ந்த நாட்களைவிட,
உனக்காகக் காத்திருந்த
காலங்களேஅதிகம்!

- பத்மாவதி  கிருஷ்ணசாமி, நன்னிலம், தமிழ்நாடு
----------------------------------------------------------------------
========================================

காதலில்  மூழ்கியவனின் கைப்பேசி
எப்போதும்  திறப்பில்...
கடனில்  மூழ்கியவனின் கைப்பேசி
எப்போதும் அணைப்பில்!
---------------------------------------------------------------------------
மேதினியில்  மேன்மை பெறும்
மேம்பட்ட காதல் வளர,
சாதியென்னும் களைகள் நீக்கி,
சாகுபடி செய்வீர் அகம் மலர!

- கவி வினோத்
குற்றாலம், தமிழ்நாடு
 =================================
==================================
அழகைப்  பார்த்து  வந்தகாதல்
நிலைக்கவில்லை  திருமணத்திற்குப்  பின்,
அண்ணனுக் கு,
குணத்தைப்  பார்த்துவந்த  காதலை
கொண்டாடுகிறான்  தம்பி
காதலர்தினத்தை,
பேரன் பேத்திகள்  வந்தபின்னும்!

- டி, கங்கை  கணேசன்மதுரை. தமிழ்நாடு
=====================================
=====================================

காதலர்களுக்குத் தேவை
ஒழுக்கம்!
ஒழுக்கத்தில் பிறப்பதே
உன்னதக் காதல்!

- கே.எஸ்.சசிகுமார், விருதுநகர், தமிழ்நாடு
====================================
====================================

காதல்   வெள்ளத்தில்
சிக்கிக்கொண்டேன்
தயவுசெய்து  யாரும்
காப்பாற்ற  வேண்டாம்
அவளைத்  தவிர!
அவள்  குறுந்தகவல் எனக்கு
உணவுப்  பொட்டலம்
அவளது முகநூல்  எனக்கு
தண்ணீர் பாட்டில்
அவளது  பார்வை என்னைக்
கரை  சேர்க்கும்  படகு!

- வீ.உதயகுமாரன். வீரன்வயல், தமிழ்நாடு
=================================
================================

ஆயுள்தண்டனையை மட்டுமே  விரும்பி
இதயச் சிறையில் அடைபடும்
உண்மையான  காதல்!
------------------------------------------------------------
என்  இதயத்தில் தவழ்கிறது
உன்  காதல்பார்வை1
என் இதயத்தைத்  தழுவுகிறது 
உன் காதல்புன்னகை!
--------------------------------------------------------------------

உன்   பார்வை
காதல்  க டிதம்  எழுதியது.
உன்  புன்னகை
காதலின்   முகவரியை   எழுதியது!

-------------------------------------------------------------------

வெறிச்சோடிக்  கிடக்கும் மனசுகளை
நிரப்பித்தான் விடுகிறது
காதலைப்பற்றிய  இன்பங்கள்,
அல்லது
துன்பங்கள்!


-முத்துஆனந்த்வேலூர், தமிழ்நாடு.

=================================
=================================
கரைமேல்  எழுதப்பட்ட  உன்  பெயரை
எடுத்துச் சென்று
கடலின்  அடியாழத்தில்
பத்திரப் படுத்திவிட்டுத்
திரும்புகிறது  அலை!

- பாடலாசிரியர்    வசந்தராஜா, தமிழ்நாடு.
==================================
=================================

என்  மனம்  காதலின்  சமாதி,
அதில்  உன்  நினைவுகள்
புன்னகை  புரியும்  ஜோதி!

=====================================
காதல்  நினைவுகளை
முட்களால்  சொறிந்தபடி
கடற்கரை  மணலில்
புதைந்து  கிடக்கிறது
மக்கிய  படகொன்று!
=====================================
பூட்டிய  என் நிசப்த பொழுதுகளைத்
திறக்கும்  சாவி
உனது புன்னகை!
வளையல் சப்தம்!
கொலுசு   சப்தம்!

- வைரநகர்  சிவாஜி, புஷ்பவனம்,
தமிழ்நாடு.
======================================
=====================================
கடும்  வெயிலும்  உறைக்கவில்லை...
கடற்கரை  காதல்!

- கூ..  ராஅம்மாசியப்பன்சேலம்.
தமிழ்நாடு.


====================================








































No comments: