Monday, March 28, 2011

"வார்ப்பு.காம்" கவிதைத் தளத்தில் பிரசுரமாகியுள்ள எனது கவிதை:

(அந்தத் தளத்தில் அவ்வப்போது தரப்படும் தலைப்பிற்குத் தக்க கவிதைகளைப் புனைந்து அனுப்புமாறு நமது குறுஞ்செய்திக் குழுமக் கவிஞர்களுக்கு நான் அனுப்பிவரும் தகவலின்படி அவர்கள் எனக்கு அனுப்பும் கவிதைகளை அத்தளத்தில் பதிவிட்டு வருகிறேன். இதுவரை நமது குழுமக் கவிஞர்களின் 20 கவிதைகள் பிரசுரமாகியுள்ளன.
இதுவரை இவ்வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ளாதோர், இனியாவது முன்வரவேண்டுமென அன்புடன் அழைக்கிறேன்)

நீயா? நானா?

நீயா? நானா என்ற போட்டி
நிலைத்துவிட்ட சமூகம் இது!
அனைத்து இன மக்களுக்கும்
அவலமில்லா வாழ்வுதர
போட்டியிடும் தலைவர்கள்
புறப்படத் தயாரில்லை!
கள்ள ஓட்டில் பதவிபெற்று
கணிசமாக சம்பாதிக்க
கனவுகாணும் காலத்தில்
கரிசனமில்லா மனிதர்களாய்!

நீயா நானா போட்டியால்
நிர்மூலம் தான் சனநாயகம்,
ஓயாத பிரச்சினைகளால்
ஒடுங்கி நிற்கும் மக்களினம்!

- கிரிஜா மணாளன், திருச்சிராப்பள்ளி
(தமிழ்நாடு)

No comments: