Saturday, March 26, 2011

"வார்ப்பு.காம்" கவிதைத்தளத்தில் நமது குறுஞ்செய்திக் குழுமத்தின் கவிஞர்கள்!




அன்புடையீர், வணக்கம்.

நமது குறுஞ்செய்திக் குழுமத்தின் கவிஞர்கள் இணையத்தின் "வார்ப்பு.காம்" கவிதைத்தளத்தில் வழங்கிவரும் கவிதைகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் பெருகிவருகின்றன என்பது மகிழ்ச்சி தரும் செய்தி.

அத்தளத்தில் கவிதைக்கான தலைப்பு அறிவிக்கப்பட்டதும். நான் அனுப்பும் தகவலைக் கண்டு தங்கள் கவிதைகளை அனுப்பி, அவர்கள் கவிதைகளை நான் பதிவிடும் நல்வாய்ப்பை எனக்களித்து வரும் தோழர்கள்/தோழியர்களுக்கு என் நன்றி.

உங்கள் ஒத்துழைப்பினை எனக்கு தொடர்ந்து அளியுங்கள்.

கூகுள் குழுமங்களான "அன்புடன்", "முத்தமிழ்". "பல்சுவை" ஆகிய குழுமங்களில் நமது நண்பர்களின் கவிதைகள் தொடர்ந்து பிரசுரிக்கப்பட்டு வருகின்றன. கவிதை ஆர்வலர்கள் அக்குழுமங்களுக்கு சென்று கண்டு, உங்கள் கருத்துக்களையும் பாராட்டுக்களையும் அவர்களுக்கு வழங்கி, அவர்களை ஊக்குவிக்க வேண்டுகிறேன். நன்றி!

அன்புடன்,

கிரிஜா மணாளன்.

No comments: