
ஓர் மகிழ்ச்சியான அறிவிப்பு!
===============================
“குறுஞ்செய்தி இதழாளர்கள் (SMS இதழாசிரியர்கள்) மற்றும் படைப்பாளர்களின் சந்திப்பு நிகழ்ச்சி” வருகிற 13.09.2009 ஞாயிறுஅன்று, திருச்சி மாநகரத்தில் நிகழவிருக்கிறது.
தமிழ்நாட்டிலுள்ள “குறுஞ்செய்தி இதழாளர்கள்/ படைப்பாளர்கள்” (SMS journal editors & poets) அனைவரும் இதில் கலந்துகொண்டு, ஏனைய படைப்பாளர்கள்/இதழாளர்களைச் சந்தித்து மகிழவும், கலந்துரையாடல் நிகழ்ச்சியில் தங்கள் கருத்துக்களைப் பகிர்ந்துகொள்ளவும் இது ஓர் அரிய வாய்ப்பாக அமையுமென்று நம்புகிறோம்.
நிகழ்ச்சி: 13.09.2009 (ஞாயிறு) காலை 10 மணியிலிருந்து மாலை 4 மணிவரை.
நிகழ்ச்சிகள் நடைபெறும் இடம்: காஜாமியான் மேனிலைப் பள்ளி, (தமிழ்நாடு மின்வாரிய அலுவலகம் எதிர்புறம்) மன்னார்புரம், திருச்சி 620020.
ஹைக்கூ தொகுப்பு வெளியீடு: நமது கவிஞர்களின் ஹைக்கூ கவிதைகள் அடங்கிய தொகுப்பு அன்றைய சந்திப்பின்போது வெளியிடப்படவிருக்கிறது. குறுஞ்செய்தி இதழாசிரியர்களும், அவ்விதழ்களைச் சார்ந்த கவிஞர்களும் தங்களது படைப்புகளை SMS மூலம் அனுப்பிவைக்க வேண்டுகிறோம்.
மற்றும் விவரங்கள் விரைவில் இணையதளத்திலும், அலைபேசி குறுந்தகவல் வாயிலா கவும் அனைவருக்கும் அறிவிக்கப்படும்.
அழைப்பிதழ் பெறும் நண்பர்கள் அனைவரும் தங்கள் வருகையைப் பதிவுசெய்து எங்களது ஏற்பாடுகளுக்கு உதவுமாறு அன்புடன் வேண்டுகிறோம்.
ஒருங்கிணப்பாளர்கள் :
கிரிஜா மணாளன்
அலைபேசி: 9952422383)
அ. கௌதமன்
அலைபேசி: 9994368626)
(திருச்சி மாவட்டக் கிளை / உலகத்தமிழ் எழுத்தாளர் சங்கம்)