Monday, August 3, 2015



டாக்டர் அப்துல் கலாமின் சிந்தனைகள். ========= கவிதைகள் ========= தாய்மண்ணின் பெருமையினைத் தரணியெங்கும் தழைக்கச் செய்த தயாளன் அப்துல்கலாமைத் தாளாத நன்றியோடு தாய்மண்ணே தழுவி அரவணைத்த நாள்….. 30.07.2015 ! - கிரிஜாமணாளன், திருச்சி. ========================= மேதை ஆ'கலாம்' என பாதை காட்டிய 'கலாம்' அய்யா எங்களை விட்டு எப்படிப் பிரிந்து போ'கலாம்'? இந்தியா வல்லரசு ஆ'கலாம்', எனும், உங்கள் கனவு நாளை பலிக் 'கலாம்'! - கவிஞர் வீ. உதயகுமாரன், வீரன்வயல். =================================================== மண்ணில் மறைந்து விண்ணிற்குச் சென்றாலும்கூட நிரந்தரமாய் நம் இதயங்களில் என்றும் வாழ்வார் மனிததெய்வம், மாமேதை அப்துல்கலாம்! - முத்துஆனந்த், வேலூர் ==================================================== கனவு காணும்படி சொன்னீர்கள் கடைசியில் உங்களைக் கனவில் மட்டுமே நாங்கள் காணும்படி செய்துவிட்டீர்களே! மனிதக்கடவுளே! உங்கள் மலர்ந்தமுகம் மறையாது எங்கள் மனதைவிட்டு! - முத்துஆனந்த், வேலூர் ======================================================== இந்தியாவின் ஆன்மா நீ! இளைஞர்களின் கனவு நீ! ஓயாது உனது காலடித்தடங்கள்! உறங்காது உன் கனவுகள்! @ @ @ எளிமையான அணுகுமுறை வலிமையான தன்னம்பிக்கை முழுமையான அறிவாற்றல், திறமையான தீர்க்கதரிசி…. டாக்டர் அப்துல்கலாம்! - எஸ்.வளர்மதி, ஈரோடு ======================================================= அக்னிச் சிறகுகளை உதிர்த்துவிட்டு கண்களை மூடியதோ கனவுப் பறவை? ************************ மரணம்கூட மகுடம் சூட்டியது மாணவர்கள் மத்தியில் மகத்தான ஆசான் அப்துல்கலாமுக்கு! - கவிதாயினி மும்தாஜ்பேகம், திருச்சி. ======================================================= அல்லாவின் சக்தியை நம்பியவர்! அணுசக்தியை விரும்பியவர்! ராமேஸ்வரத்தில் உதித்த பிரம்மச்சாரி! ராக்கெட் விஞ்ஞானத்தில் சூத்திரதாரி! மாணவர்களின் அன்புநண்பன்! மாண்புமிகு முதற்குடிமகன்! கனவுகாணச் சொன்னவர்! - இப்போது கனவாகிச் சென்றவர்! காலமெல்லாம் நிலைத்திருக்கும் கலாம் அவரின் புகழ்! -கவிதாயினி 'வஞ்சி', நெல்லை. ======================================================== குடிசை வீட்டில் பிறந்தாய், குடியரசுதலைவராய் மலர்ந்தாய்! பன்முகங்களைக் கொண்டு பாரதமக்களின் மனங்களில் நின்றாய்! கனவுகாணுங்கள் என்று சொன்னாய், இன்று கானல்நீராக மறைந்தது ஏனோ? - வி.சென்னப்பன், கீரைப்பட்டி (தர்மபுரி) -===================================================== ஏவுகணை விட்டு எவெரெஸ்ட்டைத் தொட்டவனே! இளைஞர் உள்ளமெல்லாம் எழுச்சி தீபமேற்றி, பாரதத்தை, உலகமே பார்க்கச் செய்தவனே! வல்லரசாகும் இந்தியா, வரும் 2020ல்! என்று, சபதம் ஏற்கின்றோம் - எங்கள் சாதனை நாயகரே! - மு.குமரன், பண்ணாந்தூர் ========================================================- மண்ணுலகில் பிறந்து, மகத்தான சாதனைகள் புரிந்து, விண்ணுலகம் சென்ற நீ - எங்கள் விழிகள்முன் வழிகாட்டியாய் என்றும்! - வி.சென்னப்பன், கீரைப்பட்டி, தர்மபுரி ======================================================== விதைத்துச் சென்றுள்ளார் கலாம், இளைஞர்கள் என்னும் விதை! முளைத்து நாளை விருட்சமாகும் - உலகம் முன்நின்று போற்றும் அதை! - வைரநகர் சிவாஜி, மதுரை. ======================================================== ஒரேவானம், ஒரேபூமி, வாழ்ந்தாலும், மறைந்தாலும் பாரதத்தின் ஒப்பற்ற ஒரே தலைவர் உத்தமர் அப்துல்கலாம்! அவருக்கே என்றென்றும் நமது சலாம்! - ஏ.எம்.முபாரக், கல்லுப்பட்டி (தேனி) ======================================================= விண்ணைப்பற்றிப் படித்தவர் - தாய் மண்ணைப்பற்றிப் படிக்கச் சென்றாரோ? கலாமுக்குச் சலாம் போடலாமே! அவர் சாதனைகளைச் சரித்திரம் சொல்லும்! கனவைக் காணச் சொன்னவர், காவியம் பாடவைத்துவிட்டாரே! விண்ணைத் தொடச் சென்றவரே! விண்மீனாய்க் காட்சி தருவீரோ? காற்றோடு கலந்து எமக்குக் கண்ணீர் வடியவைத்தாரோ!===================== - ஜமீலா பேகம், உதகை====== =======================================================
இறங்கிவிட்டார் மேகாலயாவின் மேகக் கூட்டங்களில்! மின்னலாய் மறைந்த அப்துல் கலாம்! இந்திய மக்களின் ஈரவிழிகளில் என்றும் உலராது சோகக் கண்ணீர்! - கவிஞர் புதுயுகம்
புதைக்கப்படவில்லை நீ, விதைக்கப்பட்டாய்! உன் கனவுகள் முளைத்து/ விருட்சமாகும்/ காலம் வரும்! 'கலாம் விருட்சம்'/ காலமெல்லாம்/ நிலைத்து நிற்கும்! - கிரிஜாமணாளன் ========================= பிழைப்பதற்கே அரசியலைப் பேணித் தழுவி நிற்கும், பெரியமனிதர்களை விட்டுவிட்டு, நாடு தழைப்பதற்குத் தன் பணியை தளராமல் ஆற்றிய தயாளரை அழைத்துக்கொள்ள உனக்கு அவசரமென்ன ஆண்டவா? - கிரிஜாமணாளன், திருச்சி

Tuesday, October 16, 2012


அன்புடையீர், வணக்கம். அக்டோபர் 14, 2012 ல் நிகழவிருந்த நமது 'குறுஞ்செய்திக் கவிஞர்கள் குடும்பச் சந்திப்பு மற்றும் மூன்றாம் ஆண்டு நிறைவுவிழா, ஆசிரியர் தகுதித் தேர்வுகள் காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. நிகழவிருக்கும் விழாவின் தேதி விரைவில் அறிவிக்கப்படும். அன்புடன், கிரிஜா மணாளன் திருச்சி.

Thursday, April 19, 2012

வாழ்த்துகிறோம்!

வணக்கம்!

நமது அன்பிற்கினிய நண்பர், புதுச்சேரி கவிஞர் திரு. குறிஞ்சி மைந்தன் அவர்கள் தனது அடுத்த இலக்கிய ஆய்விற்காக, நமது ' அலைபேசி இலக்கியம்' என்னும் தலைப்பை எடுத்துக்கொண்டுள்ளார் என்ற செய்தி அறிந்து மகிழ்வெய்துகிறோம். ஏற்கனவே தம் இலக்கியப் பணிக்காக பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ள நண்பர் இவ்வாய்வினையும் சிறப்புற முடித்து, மேன்மேலும் விருதுகள் பெற்று திகழ நமது தமிழ்நாட்டு குறுஞ்செய்திக் கவிஞர்கள் மற்றும் இதழாளர்கள் சார்பில் வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

அவரது தொடர்பு எண்:09566689083

- கிரிஜா மணாளன்
திருச்சி

Monday, March 26, 2012



மின்வெட்டு!
=========

யாரைக்கண்டு வெட்க்ம்
ஓயாமல் ஓடி ஒளிகின்றாள்
'மின்சார'க்கன்னி?


- கு.தமயந்தி

Saturday, December 31, 2011

2012 புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!




எனது இணைய நண்பர்கள்/தோழிகள், தமிழ்நாடு குறுஞ்செய்திக் கவிஞர் குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும் எனது மனங்கனிந்த 2012 புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!


- கிரிஜா மணாளன்

Monday, December 12, 2011

புதிய கவிஞர்களை அன்புடன் வரவேற்கிறேன்!





வணக்கம்.

நமது தமிழகக் குறுஞ்செய்திக் கவிஞர்கள் பலர் இந்த வலைத்தளத்தில் தமது கவிதைகளை வழங்கியிருப்பதைக் கண்டு, புதிய கவிஞர்களும் ஆர்வமுற்று தம் படைப்புகளை வழங்க முன்வந்துள்ளனர். மிக்க மகிழ்ச்சி!

தற்போது எனக்கு அறிமுகமாகியுள்ள கீழ்காணும் பெண் கவிஞர்களின் படைப்புகளை விரைவில் எதிர்பார்க்கிறேன்.

1. திருமதி. ச. வளர்மதி. ஈரோடு (தமிழ்நாடு)

2. திருமதி. தமயந்தி. கள்ளக்குறிச்சி, (தமிழ்நாடு)



உங்கள் படைப்புகளுடன். இவ்வலைத்தளம் புதிய பொலிவோடு மிளிருமென அன்புடன் எதிர்பார்க்கிறேன். நன்றி.


- கிரிஜா மணாளன்

Wednesday, October 5, 2011

அன்புடன் அழைக்கின்றோம்

எங்கள் ‘குறுஞ்செய்திக் கவிஞர்கள் குடும்ப’ (Mobile SMS Kavignarkal) உறுப்பினர்களின் 6 வது சந்திப்பு மற்றும் 2 வது ஆண்டுவிழாவிற்கு அனை வரையும் அன்புடன் அழைக்கின்றோம்.

நாள் : 09.10.2011 (ஞாயிறு)
நேரம்: காலை 09.00 லிருந்து மாலை 4 மணி வரை.
நிகழ்விடம்:
முன்னாள் கூட்டுறவு வங்கி
NNR பிரியாணி ஹோட்டல் எதிர்புறம்)
அம்மாப்பேட்டை மெயின் ரோடு
சேலம் - 636 001

சிறப்பு அழைப்பாளர்கள் பலருடன், தமிழகத்தின் பல மாவட்டங்களிலிருந்தும் கவிஞர்கள் பங்கேற்க வருகிறார்கள்.
எங்களது அமைப்புசாரா இக்கவிக்குழுமத்தின் முதல் சந்திப்பு நிகழ்ச்சி, தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலுள்ள குறுஞ்செய்தியாளர்களை ஒருங் கிணைக்கும் நிகழ்ச்சியாக கடந்த 2009, செப். 13 அன்று திருச்சியில் நிகழ்ந்தது. தொடர்ந்து, திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு, ஈரோடு மாவட்டம் அந்தியூர், மீண்டும் திருச்சியில் முதாலாம் ஆண்டு விழா, தொடர்ந்து, திருச்சியில் ஓர் சந்திப்பு நிகழ்ச்சி. இவற்றைத் தொடர்ந்து, இப்போது சேலம் மாநகரில் ஒன்றுகூடுகிறோம்.
குறுஞ்செய்திக் கவிஞர்கள், அச்சு இதழ்களில் மட்டுமின்றி, இப்போது இணைய தளங்களிலும் தமது படைப்புகளை வழங்கி புகழ்பெற்று வருவது மகிழ்ச்சி தரும் செய்தி. இணையதளத்தின் ‘அன்புடன்’, ‘முத்தமிழ்’, ‘தமிழ்த்தென்றல்’, ‘பல்சுவை’, ‘தமிழமுதம்’ மற்றும் பல வலைத்தளங்களிலும் இடம் பெற்று தங்கள் படைப்புகளை வழங்கி வருகிறார்கள்.
இப்போது சேலம் மாநகரில் நிகழும் ‘சந்திப்பு விழா’வில் பங்கேற்க “தமிழ்த்தென்றல்” குழுமத் தலைவர் திரு. என்.யு.துரை அவர்கள் இசைந்துள்ளார்கள். சேலம் மாவட்டம், மற்றும் அண்டை மாவட்டங்களிலுள்ள ‘இணையதள குழுமங்களின் உறுப்பினர்களும், கவிதையார்வலர்களும் இவ்விழாவிற்கு வருகை தந்து எங்களை மகிழ்விக்க அன்புடன் வேண்டுகிறோம்.
அன்புடன்,
குறுஞ்செய்திக் கவிஞர்கள் குடும்பம்
தமிழ்நாடு.

ஒருங்கிணைப்பாளர்: கிர்ிஜா மணாளன், திருச்சி

விழா ஏற்பாடு: திருமதி. எஸ். சுமதி, சேலம்